இந்தியன் 2 ல் பணிபுரியாதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இந்தியன் 2′-வில் பணிபுரியாதது ஏன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் 2-ம் பாகத்தில் கமல் – ஷங்கர் இருவரும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘இந்தியன்’ படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டனர். இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் பணிபுரியாதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:

‘இந்தியன் 2’-ல் நான் பணியாற்றவேண்டும் என்ற கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். டைரக்டர் சொல்லவேண்டும் என்று கூறினேன். ஷங்கர் எப்போதுமே புதிய விஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்து விடும் இல்லையா? ஏற்கனெவே ‘அந்நியன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைப் போல இது ஒரு சிறிய ப்ரேக். அவ்வளவுதான்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Related posts