புதிய ஆளுநராக சுரேஷ் ராகவன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட இருக்கும் சுரேஷ் ராகவன் இன்று காலை 10 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந் நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts