ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித

ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பல புதிய தகவல்கள் விசாரணையின் போது தெரியவந்துள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் முற்றாக முடியும் வரை அரசாங்கம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடப்போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஊழலிற்கு எதிரான அமைப்பின் இயக்குநர் நாமல்குமாரவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நாமல்குமார முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உரையாடியமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts