யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (19) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பது என்றும் பல்கலைகழக ஊழியர் சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் இன்றைய நாள் முழுநாளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினையும் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொண்டது.

Related posts