‘காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் நவ.27-ல் ரிலீஸ்

ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம்

வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்துக்கு ’காந்தாரா: சாப்டர் ஒன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் ‘காந்தாரா 2’ படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படம் ‘காந்தாரா’ படத்தின் முன்கதையை (prequel) அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts