படமாகும் இன விடுதலை போராளிகள் கதை

தமிழில் `கயிறு’, `வாண்டு’ திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.ஆர்.குணா.

2019-ல் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா மற்றும் செவன் கலர்ஸ் பேச்சுலர்ஸ் சர்வதேச திரைப்பட விழா, மெக்சிகோ திரைப்பட விழா போன்றவற்றில் `கயிறு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர் எஸ்.ஆர்.குணா.

தற்போது சேயன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் `தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் எஸ்.ஆர்.குணா டைரக்டராகி உள்ளார்.

இன விடுதலைக்காக போராடும் நாடுகளில் போராளிகளை பயங்கரவாதிகள் என அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் தடை செய்வதால் போராளிகள் மேற்கத்திய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகிறார்கள்.

அப்படி ஒரு போராளி இன விடுதலைக்காகப் போராடியவன் என உண்மையை கூறி அரசியல் தஞ்சம் கோருவதையும், சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி தனக்கு சாதகமான தீர்ப்பையும், இன விடுதலைக்கான திறவுகோலையும் எப்படி பெறுகிறான்? என்ற கருவையும் மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

முழு படப்பிடிப்பையும் கனடாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts