குருக்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற ரஜினிகாந்த்…!

நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதைத் தவிர்த்து வந்த அவர், ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் கடந்த 2019-இல் இமயமலை பயணம் மேற்கொண்டார்.

நேற்று ஜெயிலர் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, தற்போது மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் 7 நாள்கள் தங்கியிருந்து பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்.

இந்நிலையில், ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்டு அவரும் சிறப்புரை ஆற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts