நயன்தாரா இப்போது ரூ.10 கோடி கேட்கிறார்

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நாயகி அந்தஸ்தில் இருப்பவர் நயன்தாரா. தமிழ் நடிகைகளில் நயன்தாரா ஏற்கனவே அதிக சம்பளம் பெற்று வந்த நிலையில் கதாநாயகியை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்த பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
ஒரு படத்துக்கு ரூ.6 முதல் ரூ.7 கோடி வாங்கி வந்த அவர் இப்போது ரூ.10 கோடி கேட்கிறார் என்கின்றனர் `ஜவான்’ இந்தி படத்திலும், `இறைவன்’, `டெஸ்ட்’ உள்ளிட்ட 4 தமிழ் படங்களிலும் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.
இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இதே நாளில் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
திருமண நாள் குறித்து விகேஷ் சிவன் தனது சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது:- “நேற்றுதான் எங்களுக்குத் திருமணம் ஆனது போலிருக்கிறது.
இதற்கிடையில், நண்பர்கள் முதல் வருட திருமண நாள் வாழ்த்துகளை அனுப்புகிறார்கள்.
லவ் யூ தங்கமே எல்லா ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் நாங்கள் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம்.
இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒன்றாகச் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன.
அனைத்து நல்ல மனிதர்களின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஆசிர்வாதத்துடன், எங்கள் திருமண வாழ்க்கை. இரண்டாம் ஆண்டில். உயிர் மற்றும் உலகுடன்” என விக்னேஷ் கூறி உள்ளார்.குழந்தைகளுடன் நயன்தாராவின் புகைப்படத்தையும் விக்கி பகிர்ந்துள்ளார்.

Related posts