வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசேட பொதி!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எதிர்காலத்தில் விசேட பொதி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்படி, வௌிநாட்டு முதலீட்டுக்களுக்கான அரசாங்க நிதி மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்ட சலுகைகளின் பொதி ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்புக்கள் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும், இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் அது முறையாக மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

—–

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், நிறுவனங்களை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் கலைக்கப்படும். ஏனெனில் அவற்றை பராமரித்துச் செல்ல போதிய வருமானம் இல்லை. ஒன்றும் செய்வதற்கில்லை. வேலை செய்ய பணமில்லை. எனவே, அந்த நிறுவனங்களை பராமரிக்க முடியாது. அரசு நிறுவன சீர்திருத்தத்தின் கீழ் அந்த அந்த நிறுவனங்கள் கலைக்கப்படும். மக நெகும மற்றும் அதனுடன் தொடர்புடைய 4 நிறுவனங்கள்.

Related posts