மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், அன்றைய தினம் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இதனைப் பாதித்துள்ளதாகவும் தேர்தல் நாளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி இறுதி முடிவு எடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts