பொன்னியின் செல்வன் 2′ மீண்டும் படப்பிடிப்பா?

பொன்னியின் செல்வன் 2 படத்தில் விடுபட்ட சில காட்சிகளுக்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரைக்கு வந்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் பார்த்தது.

இதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இரண்டு பாகமும் ரூ.500 கோடி செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தை எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். இதில் வந்த நடிகர்-நடிகைகள் தற்போது வேறு படங்களில் நடித்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்த வருடம் ஜூன் அல்லது ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் விடுபட்ட சில காட்சிகளுக்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் கூறும்போது, ”பொன்னியின் செல்வன் படத்துக்கு டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. எடிட்டிங்கும் நடக்கிறது.

காட்சிகள் திருப்தியாக இல்லை என்றால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால் அப்படி எந்த காட்சியும் இல்லை. எனவே மீண்டும் படப்பிடிப்பை நடத்துவதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை. எடிட்டிங்கில் ஏதேனும் குறை தெரிந்தால் அப்போது படப்பிடிப்பு நடத்துவதா இல்லையா என்று யோசிப்போம்” என்றனர்.

Related posts