ஓடும் புகையிரதத்தினுள் மோதல் – பாதுகாப்பு அதிகாரி பலி

ஓடும் புகையிரதத்தினுள் ஏற்பட்ட மோதலில் புகையிரத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் கடுகதி புகையிரத்ததிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புகையிரதத்தில் பயணித்த சிலர் மது அருந்திவிட்டு மற்ற பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், புகையிரதத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

அந்த மோதலில், புகையிரதத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெயாங்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts