கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகம

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் சரணடைந்த மஹிந்த கஹந்தகம சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுபிட்டிய மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

மஹிந்த கஹந்தகம மே 9 சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts