4 மாநில வெற்றி குறித்து குஷ்பு கருத்து

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுகிறது.

பா.ஜ.க.வின் இந்த வெற்றி குறித்து குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளர். அவர் தனது பதிவில் மக்கள் பா.ஜ.க. உடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. கட்சி மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதுவும் தடுக்க முடியாது.

இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்துவிட்டது. மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். பா.ஜ.க.வில் உள்ள நாங்கள் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்.

வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தனர். கடுமையாக உழைத்த அனைத்து தன்னார்வலர்களும், செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நரேந்திர மோடி ஜி, நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

—–

403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதில், பா.ஜ.க. 270க்கும் மேற்பட்ட இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 120க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உத்தர பிரதேசத்தில் எங்களுடைய அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஒவ்வொரு வளர்ச்சிக்கான விசயங்களிலும் நாங்கள் பணியாற்றி உள்ளோம். அதனாலேயே, பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புல்டோசருக்கு முன் எதுவும் வரமுடியாது. அது சைக்கிள் ஆகட்டும். அல்லது வேறு எதுவாகவும் இருக்கட்டும். ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆட்சியில், கிரிமினல்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை கொண்டு அதிகாரிகள் இடித்து தள்ளினர். சைக்கிளை தேர்தல் சின்னம் ஆக கொண்ட, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூட முன்பு, புல்டோசர் பாபா என யோகியை அழைத்துள்ளார். இதுபற்றி தேர்தல் கூட்டமொன்றில் யோகி பேசும்போது கூட, விரைவுசாலை அமைக்க பயன்படும் புல்டோசர், மாபியா (குற்றவாளிகள் கொண்ட கும்பலை) அழிக்கவும் சிறந்த ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.

Related posts