கொரானாவில் இருந்து பூரண குணமடைந்தார் வடிவேலு..!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகர் வடிவேலு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வடிவேல், டைரக்டர் சுராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் கடந்த 23-ந்தேதி சென்னை திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வடிவேலு, டைரக்டர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் நடிகர் வடிவேலு பூரண குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நடிகர் வடிவேலு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தொடர்ந்து அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்று அவரது மக்கள் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்து உள்ளார்.

Related posts