கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கும் தனுஷ்..!

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் 1950 களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளது. மேலும், இந்த திரைப்படம் அடுத்த வருடம் இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள முதல் திரைப்படமான ‘ராக்கி’ வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ள திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’ திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது.

Related posts