ஊர்வசியின் 700-வது படம்

தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணச்சித்திர வேடங்களுக்கு ஊர்வசியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் கடைசியாக வந்தன. 8 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் தயாராகும் அப்பத்தா என்ற படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் மிதுனம் என்ற மலையாள படம் 1993-ம் ஆண்டு வெளியானது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

அப்பத்தா ஊர்வசிக்கு 700-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்வசியின் 700-வது படத்தை இயக்குவது பற்றிய தகவலை பிரியதர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

Related posts