சிவா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா?

சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்துக்குப் பிறகு சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை இறுதியானால் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts