ஸ்கொட்லாந்திலிருந்து திரும்பினார் ஜனாதிபதி

ஸ்கொட்லாந்து சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் இடம்பெற்ற COP26, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்தார்.

குறித்த மாநாடு ஒக்டோபர் 31ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் இடம்பெறுவதோடு, நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் இடம்பெற்ற உலகத் தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றி உரையாற்றியிருந்ததோடு, பல்வேறு அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts