ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை தன்வசப்படித்தினார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இன்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த நீரஜ் சோப்ராவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்\வீராங்கனைகள் அனைவரும் இன்று நாடு திரும்பினர். வீரர்\வீராங்கனைகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts