திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி விதி மீறல்

திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில் கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதித்திருப்பது விதி மீறல். திரையரங்குகளுக்கு வழங்கபட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?” மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என கூறி உள்ளார்.

Related posts