கூகுள் றோபோ மூலம் எழுதப்படும் நற்சிந்தனைகள்..

இன்று வாசித்த முக்கிய விடயம் ;

நீங்கள் உங்களுடைய சமூக சூழலை முதல் தரமானதாக ஆக்கிக் கொள்ள உங்களுக்கு உதவக்கூடிய சில நடவடிக்கைகள் இவை..;

01. புதிய குழுக்களுடன் கலந்து பழகுங்கள். எப்போதும் ஒரே குழுவினருடன் கலந்து பழகுவதன் மூலம் உங்கள் சமூக சூழலை மட்டுப்படுத்திக் கொள்வது சலிப்பையும், மந்தமான மனப்போக்கையும், திருப்தியின்மையையும் உருவாக்கும்.
அதேபோல உங்களுடைய வெற்றி உருவாக்க திட்டங்களுக்கு மக்களைப் பற்றி புரிந்து கொள்வதில் நீங்கள் ஒரு நிபுணராக வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரே ஒரு சிறு குழுவினரை ஆய்வு செய்வதன் மூலம் மக்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பது, ஒரே ஒரு சிறிய புத்தகத்தை படித்துவிட்டு கணிதத்தில் நிபுணத்துவம் பெற முயற்சிப்பதை போன்றதாகும்.

02. புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். புதிய அமைப்புகளில் சேருங்கள். உங்கள் சமூகத்தை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் இருப்பதைப் போலவே மக்களும் பல்வேறு வகையினர் இருப்பது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஒரு பரந்த பரிமாணத்தை அதற்கு கொடுக்கிறது. இது ஒரு சிறந்த ஊட்டமாக அமைகிறது.

03. உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்ட நபர்களை தேர்ந்தெடுங்கள். இந்த நவீன காலத்தில் குறுகிய கண்ணோட்டம் கொண்ட நபருக்கு அவ்வளவு நல்ல எதிர்காலம் இருப்பதில்லை!

முக்கியமான பொறுப்புகளும், பதவிகளும் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்கின்ற நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன! பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்ட மக்களுடன் கலந்து பழகுங்கள்.

உங்களுக்கு நேர் எதிரான கண்ணோட்டங்களை கொண்டவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், ஆனால் அவர்கள் உண்மையான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

04. அற்பமான முக்கியத்துவமற்ற விஷயங்களை விட்டுவிட்டு அவற்றிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மீது கவனம் செலுத்துகின்ற நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்.உங்கள் மனச் சூழலை பாதுகாத்து கொள்ளுங்கள்.
நேர்மறையான விஷயங்களில் ஆர்வம் கொண்டுள்ள நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகின்ற நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் திட்டங்கள் மற்றும் யோசனைகளுக்கு ஊக்கம் கொடுக்கின்ற நண்பரை கண்டுபிடியுங்கள்.
இதைவிட அற்ப சிந்தனையாளர்களை உங்கள் நெருங்கிய நண்பர்களாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் நீங்களும் மெல்லமெல்ல அற்ப சிந்தனையாளராக மாறிவிடுவீர்கள்.

05. நச்சு உணவு எப்படி விஷத்தை உடலில் ஏற்படுத்துமோ அதைவிட மோசமானதாக இருப்பது “ வம்பு பேச்சு “ என்று அழைக்கப்படுகின்றது. ஒன்று இது மனதை பாதிக்கிறது, இரண்டாவது தன் மனதில் நஞ்சு கலப்பது ஒருவருக்கும் தெரியாது, அந்த அளவிற்கு அது நுண்ணியது.

இதை கொஞ்சம் சிந்தியுங்கள்.

இது இந்தவார கூகுள் றோபோ
எழுதுகை !

கூகுளை எழுத செய்தது ,
கி.செ. துரை 21.12.2018

Related posts