மைத்திரி மற்றும் ரணிலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

சாட்சி விசாரணைகளை செவிமடுப்பதற்காக அவர் இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு 01.05)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாக்குமூலம் வழங்குவதற்காக ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வாக்குமூலம் வழங்குவதற்காக ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
——-

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். 20 ஆவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களும் பாராளுமன்றம் வரலாம் என பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும்போது தங்களுக்குத் தேவையான விதத்தில் அரசியமைப்பினை திருத்தம் செய்கிறார்கள் .இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளோ மாற்றங்களோ ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியமைப்பின் 17ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18ஆவது திருத்திற்கும், 19 ஆவது திருத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள் எனவும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், 19ஆவது திருத்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய நிலையில் தற்போது 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts