மதுபானசாலைகளை இன்றும் நாளையும் மூடிவைக்க பணிப்பு

நாடு முழுவதுமுள்ள அனைத்து மது பான சாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படவுள்ளன. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்துச் செய்யப்படும். இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியுமென மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வன்முறைச் சம்பவங்கள் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கு இரண்டு நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, மதுவரி திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவித்ததை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts