தர்பார் படம் நஷ்டம் பாதுகாப்பு கோரி ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு..!

பாதுகாப்பு கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

தர்பார் படம் நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக, பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தர்பார் பட விநியோகத்தில் நஷ்டம் அடைந்ததாகவும், இழப்பீடு கோரியும் தினமும் 30 முதல் 40 வினியோகஸ்தர்கள் மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும்.

அதனால் தனக்கு தனிப்பட்ட முறையிலும், தனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

முருகதாஸ் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

இந்த மனுக்கள் மீது பிப்ரவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Related posts