குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது; லதா

லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதற்கான போதிய தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என தெரியவில்லை.விண்வெளி என பல துறைகளில் நாம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை இன்னும் மீட்க முடியவில்லை.

குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. குழந்தைகள் நலனுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். இது முதல் முறை இல்லை. இது போல பலமுறை நடந்துள்ளது. இதை தொழில்நுட்பம் மூலம் சரிசெய்ய முடியும்” என்றார்.

Related posts