SLFP மற்றும் SLPP கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் 7 ஆவது சுற்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் 7 ஆவது சுற்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கட்சிகளுக்கும் இடையில் இதற்கு முன்னர் 6 முறை கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் ஒரு மாத காலம் குறித்த கலந்துரையாடல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் இன்று இடம்பெறுகின்ற கலந்துரையாடலிற்கு கலந்து கொள்ளும் உறப்பினர்களில் இர கட்சிகளும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் பசிர் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் டலஸ் அலஹப்பெரும ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts