தமிழ் மொழியில் இரு யாழ். மாணவர்கள் முதலிடத்தில்

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் இரு மாணவர்கள் 199 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலுள்ளதுடன் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் யாழ் மாணவன் முதலிடத்தைப்பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான எம். திகலொளிபவன், சாவகச்சேரி ஆரம்ப பாடசாலை மாணவனான நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழிமூலம் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்திலுமுள்ளனர்.

அதன்படி பிலியந்த சோமவீர மகாவித்தியாலய மாணவனான பி.எம். விதானகேயும் வெயாங்கொட புனித மரியாள் வித்தியாலய மாணவனான கே. சன்னுப டிமித் பெரேராவும் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளனர்.

இதேவேளை, 3 மாணவர்கள் 198 புள்ளிகளைப்பெற்று 2 ஆவது இடத்திலுள்ளனர்.

மினுவாங்கொட ரணதுங்க ஆரம்பப்பாடசாலை மாணவனான சென்ஜுய் அகித்ம ஹெட்டியாராச்சி, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான எம்.திகலொளிபவன், சாவகச்சேரி ஆரம்ப பாடசாலை மாணவனான நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளனர்.

Related posts