கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றைய தினம் (03) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்று இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு சென்று கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதிச் சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts