அரசு டிஜிட்டல் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவது முறையா ?

(இரா­ஜ­துரை ஹஷான்)

தேசிய மற்றும் சர்­வ­தே­சத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் நிகழ்­நிலை காப்புச் சட்­ட­மூலம் 46 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வேற்­றப்­பட்­டது. சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 108 வாக்­கு­களும், எதி­ராக 62 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை போலவே இந்த சட்டம் வெகு­காலம் நீடிக்­காது.

நிகழ்­நிலை காப்புச் சட்ட வரைபு 2023.09.18 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக வெளி­யி­டப்­பட்­டது. பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்­ட­மூ­லத்தை 2024.10.03 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­ததை தொடர்ந்து இந்த சட்­ட­மூ­லத்­துக்கு எதி­ராக 45 இற்கும் அதி­க­மான மனுக்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டன.

நிகழ்­நிலை காப்பு சட்­ட­மூ­லத்தின் பெரும்­பா­லான ஏற்­பா­டு­களை நிறை­வேற்ற வேண்­டு­மாயின் அதற்கு விசேட பெரும்­பான்மை அவ­சியம் என்­றும், ஒரு­சில ஏற்­பா­டுகள் குழு­நி­லையில் திருத்தம் செய்­யப்­ப­டு­மாயின் சட்­ட­மூ­லத்தை சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றலாம் என உயர்­நீ­தி­மன்றம் வியாக்­கி­யானம் வழங்­கி­யி­ருந்­தது.

அர­சி­ய­ல­மைப்பின் 121 (1) ஆம் பிரிவின் பிர­காரம் உயர்­நீ­தி­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட நிகழ்­நிலை காப்பு சட்­ட­மூலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் தனது வியாக்­கி­யா­னத்தில் 5,7,9,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,30,31,32,36,42,45,53,54 ஆகிய சரத்­துக்­களை நிறை­வேற்­று­வ­தாயின் அதற்கு பாரா­ளு­மன்­றத்தில் விசேட பெரும்­பான்மை அவ­சியம் என குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் சட்­ட­மூ­லத்தின் 3,5,7,9,11,12,13,14,14,16,17,18,19,20,21,22,23,24,25,29,30,31,32,37,36,42,53,55,56 ஆகிய சரத்­துக்கள் பாரா­ளு­மன்­றத்தில் குழு­நி­லையில் திருத்தம் செய்­யப்­ப­டு­மாயின் சட்­ட­மூ­லத்தை சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடியும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆகவே மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட விட­யங்­க­ளுக்கு அமை­வாக சட்­ட­மூலம் மற்றும் அதன் விதி விதா­னங்கள் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணல்ல என்று உயர்­நீ­தி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது. உயர்­நீ­தி­மன்றம் முன்­வைத்த திருத்­தங்­களில் முக்­கி­ய­மான 13 திருத்­தங்­களை அர­சாங்கம் சட்­ட­மூ­லத்தில் உள்­வாங்­க­வில்லை என எதிர்க்­கட்­சி­யினர் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளார்கள்.

03 ஆவது அத்­தி­யா­யத்தில் சட்­ட­மூ­லத்தின் நோக்கம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, அச்சம், அச்­சு­றுத்தல், அச்­ச­மூட்டல், நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வதால் பாதிக்­கப்­படும் நபரை பாது­காத்தல்,

நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் வகையில் அல்­லது நீதி­மன்­றத்தின் அதி­காரம் மற்றும் நடு­நிலை தன்மை ஆகி­ய­வற்­றுக்கு பாதிப்பு ஏற்­படும் கருத்­துக்­களை தொடர்­புப்­ப­டுத்­து­வதை தடுத்தல்,

இலங்­கைக்குள் ஒரு சம்­பவம் தொடர்பில் பொய்­யான கருத்தை மீண்டும் மீண்டும் தொடர்­புப்­ப­டுத்­து­வ­தற்கு நிகழ்­நிலை ஊடாக நிதி வழங்கல், அவ்­வா­றான இடத்தை ஊக்­கப்­ப­டுத்தல் மற்றும் அந்த தரப்­பி­ன­ருக்கு ஏனைய ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வதை தடுத்தல் என்­பன இச்­சட்­டத்தின் பிர­தான நோக்­க­மாகும்.

நிகழ்­நி­லையில் பதி­வேற்றம் செய்­யப்­படும் ஒரு­சில விட­யங்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய செயற்­பா­டு­களை இந்த சட்­ட­மூலம் குற்­ற­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்­கைக்குள் ஒரு சம்­பவம் தொடர்பில் உண்­மைக்கு புறம்­பாக கருத்­துக்­களை வெளி­யி­டுதல், அவ­ம­திக்கும் வகையில் போலி­யான கருத்­துக்­களை குறிப்­பி­டுதல், உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­க­ளினால் கல­வ­ரத்தை தோற்­று­வித்தல், மத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் இவற்றுள் உள்­ள­டங்­கு­கின்­றன.

1 பகுதி அத்­தி­யாயம் இலக்கம் (4)-(10)

இணை­ய­வழி பாது­காப்பு தொடர்பில் ஆணைக்­கு­ழுவை ஸ்தாபித்தல்.

தொழில்­நுட்பம்,சட்டம்,நிர்­வாகம், சமூக சேவை,பத்­தி­ரிகை துறை, அறி­வியல் மற்றும் தொழில்­நுட்பம் மற்றும் முகா­மைத்­துவம் ஆகிய துறை­களில் தேர்ச்­சிப்­பெற்ற ஐந்து உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஜனா­தி­ப­தியால் இந்த ஆணைக்­குழு ஸ்தாபிக்­கப்­படும்.

ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் சுய­மாக பதவி விலகல், பதவி விலக்கல் அல்­லது பதவி வெற்­றி­ட­மாகும் போது தகு­தி­யா­ன­வர்­களை நிய­மிப்­ப­தற்கும் ஜனா­தி­ப­திக்கு முழு­மை­யான அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. மூன்று ஆண்­டு­களை வரை­ய­றுத்­த­தாக ஆணைக்­குழு செயற்­படும்.

ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வரை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக நிய­மிப்பார். ஆணைக்­கு­ழுவின் கூட்டம் தலை­வ­ரினால் கூட்­டப்­ப­டு­வ­துடன்,கூட்ட நடப்பெண் மூன்­றாக காணப்­பட வேண்டும்.

ஆணைக்­கு­ழுவின் அதி­காரம் மற்றும் பொறுப்பு

தடை அல்­லது பொய்­யான கருத்­துக்­களை வெளி­யிடும் நப­ருக்­காக விட­ய­தா­னங்கள் அல்­லது விளம்­ப­ரத்தை வெளி­யி­டுதல்,அவ்­வா­றான தவ­றான செய்­தி­களை பதி­வேற்றம் செய்யும் சேவை வழங்­கு­ந­ரிடம் அத்­த­க­வலை நீக்கிக் கொள்­ளு­மாறு அறி­வு­றுத்தல்,

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தல் மற்றும் நீதி­மன்­றத்தின் அதி­காரம் மற்றும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க நீதி­மன்­றத்­துக்கும் ஏனைய தரப்­புக்கும் ஒத்­து­ழைப்பு வழங்கல்,

நீதி­மன்­றத்தின் கட்­ட­ளை­யுடன் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கல்,போலி­யான செய்தி மற்றும் கருத்­துக்கள் தொடர்பில் பொது மக்­க­ளுக்கு தெளி­வுப்­ப­டுத்தல்,சமூக ஊடக சேவையை வழங்கும் இணை­யத்­த­ளத்தை பதிவு செய்தல், இலங்­கையின் நிகழ்­நிலை பாது­காப்பு தொடர்­பி­லான சகல விட­யங்­க­ளையும் அர­சாங்­கத்­துக்கு அறிக்­கை­யிடல்.

குற்றம் – இலங்­கையில் போலி­யான விடயம் அல்­லது கருத்தை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­வதால் தேசிய பாது­காப்பு,பொது சுகா­தாரம் அல்­லது பொது மக்கள் அமை­திக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தல்

தண்­டனை – குற்­ற­வா­ளிக்கு ஐந்து வரு­ட­கால சிறைத்­தண்­டனை வழங்கல் அல்­லது அப­ராதம் விதித்தல்.அல்­லது தண்­டனை மற்றும் அப­ரா­தத்­திற்கு உள்­ளா­குதல்.

குற்றம் – நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் வகையில் போலி­யான கருத்­துக்­களை வெளி­யி­டுதல்

தண்­டனை –அர­சி­ய­ல­மைப்பின் 105 ஆவது விட­ய­தா­னங்கள் மற்றும் 1978 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதி­மன்ற கட்­ட­ளைச்­சட்­டத்தின் 18 மற்றும் 55 ஆவது சரத்­து­க­ளுக்கு அமை­வாக தண்­டனை வழங்கல்.

குற்றம் – போலி­யான கருத்­துக்­க­ளினால் கல­வ­ரத்தை தோற்­று­வித்தல், வெறுப்­பூட்டும் வகையில் தூண்­டி­வி­டுதல்,

தண்­டனை – ஐந்து வரு­ட­கால சிறை அல்­லது அப­தாரம் விதித்தல்,அல்­லது சிறை மற்றும் அப­ராதம் என்ற இரு தண்­ட­னை­க­ளுக்கும் உள்­ளா­குதல்,

குற்றம் – உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­க­ளினால் மத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தல்

தண்­டனை – குற்­ற­வா­ளிக்கு மூன்று வரு­ட­கால சிறை தண்­டனை,அப­ராதம் விதித்தல் அல்­லது சிறைத்­தண்­டனை,அப­ராதம் ஏதே­னு­மொன்­றுக்கு உட்­ப­டுத்தல்

குற்றம் – மத பின்­பற்­றலின் போது வெறுக்­கத்­தக்க வகையில் ஒரு தரப்­பி­ன­ரது நம்­பிக்­கையை புன்­ப­டுத்தும் வகையில் உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை வெளி­யி­டுதல்

தண்­டனை – குற்­ற­வா­ளிக்கு இரண்டு ஆண்­டு­கால சிறை தண்­டனை அல்­லது அப­ராதம் விதித்தல் அல்­லது சிறை தண்­டனை,அப­ராதம் விதித்தல்.

குற்றம் – நிகழ்­நிலை முறைமை ஊடாக இணை­யத்­தளம் ஊடாக உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்கள் அல்­லது விட­யங்­களை வெளி­யி­டுதல் அல்­லது மோசடி செய்தல்

தண்­டனை – ஒரு வரு­ட­கால சிறைத்­தண்­டனை அல்­லது அப­ரா­தத்­துக்கு உட்­ப­டுதல்,அல்­லது சிறைத்­தண்­டனை,அப­ராதம் என்ற இரு தண்­ட­னை­க­ளுக்கும் உள்­ளா­குதல்,

குற்றம் – பிறி­தொரு தரப்­பி­னரை அடை­யா­ளப்­ப­டுத்தி மோச­டியில் ஈடு­ப­டுதல்

தண்­டனை – ஐந்து வரு­ட­கால சிறைத்­தண்­டலை அல்­லது அப­ராதம்

குற்றம் – சமூக அமை­தியை சீர்­கு­லைப்­ப­தற்­காக தூண்­டி­விடும் வகையில் உண்­மைக்கு புறம்­பான விட­யங்­களை பதி­வேற்றம் செய்தல்

தண்­டனை – ஐந்து வரு­ட­கால சிறைத்­தண்­டலை அல்­லது அப­ராதம்

குற்றம் – ஒரு நபரை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் நோக்கில் இலக்­குப்­ப­டுத்­தப்­பட்ட நபரை அல்­லது இலக்­குப்­ப­டுத்­தப்­பட்ட நப­ருடன் தொடர்­பு­டைய நபரின் ‘தனிப்­பட்ட தக­வல்கள்'( தனிப்­பட்ட முறையில் பகிர்ந்துக் கொண்ட புகைப்­ப­டங்கள்,குரல் பதிவு,காணொளி பதிவு) என்­ப­ன­வற்றை வெளி­யி­டுதல்,

தண்­டனை – ஐந்து வருட கால சிறை­தண்­டனை அல்­லது ஒரு இலட்சம் ரூபா அப­ராதம், குற்­றத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு சிறைத்­தண்­ட­னை­யுடன் அப­ராதம்

குற்றம் – தண்­டனை சட்டக் கோவைக்கு அமை­வாக சிறுவர் துஸ்­பி­ர­யோ­கத்­துடன் தொடர்­பு­டைய செயற்­பா­டுகள் அல்­லது ஊக்­கு­வித்தல் அல்­லது சிறு­வர்­களின் உட­லு­றுப்­புக்­களின் தனிப்­பட்ட பகு­தி­களின் புகைப்­ப­டங்கள்,குரல் பதி­வுகள் மற்றும் காணொ­ளி­களை வெளி­யி­டுதல்

தண்­டனை – 20 வரு­ட­கால சிறைத்­தண்­டனை,அப­ராதம் அல்­லது சிறைத் தண்­ட­னை­யுடன் அப­ராதம்.

குற்றம் – ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரங்­க­ளுக்கு அமைய வெளி­யி­டப்­படும் விதி­வி­தா­னங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு 24 மணித்­தி­யா­லத்­துக்குள் அந்த விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமைய செயற்­ப­டு­வதை தவிர்த்தல்.

தண்­டனை -ஐந்து வரு­ட­கால சிறை­தண்­டனை அல்­லது 10 இலட்சம் ரூபா அப­ராதம்.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட குற்­றங்­களை நப­ரொ­ருவர் இலங்­கைக்குள் அல்­லது வெளியில் இருந்து புரி­வா­ராயின் அச்­சந்­தர்ப்­பத்தில் இந்த சட்­டத்தின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இந்த சட்­ட­மூலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் முன்­வைத்த திருத்­தங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட வகையில் இந்த சட்­ட­மூலம் இயற்­றப்­பட்­ட­தாக எதிர்க்­கட்­சி­யினர் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 3 ஆம் அத்­தி­யா­யத்தில் வழங்­கப்­பட்­டுள்ள கருத்து மற்றும் பேச்சு சுதந்­தி­ரத்தை அனை­வரும் சிறந்த முறையில் பயன்­ப­டுத்­து­கி­றார்­களா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது.ஒரு­வ­ரது உரிமை பிற­ரது சுதந்­தி­ரத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடாது.சுதந்­திரம் மற்றும் உரிமை என்­பன ஒன்­றோடு ஒன்று தொடர்புக் கொண்டுள்ளது.

தற்போதைய டிஜிட்டல் மயமாக்கலின் முரண்பாடுகளின் ஒரு ஆயுதமாக ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள்.போலி முகப்பு புத்தக கணக்குகளை ஆரம்பித்து தமக்கு எதிர்மறையானவரை தகாத முறையில் பழிப்பது. விமர்சனங்களை முன்வைப்பது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டும் நிலையை தோற்றுவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. வகுக்கப்படும் கண்காணிப்புக்கள் அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடியொற்றியதாக காணப்பட வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் எதிர்மறையான அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளவரை இலக்காகக் கொண்டுள்ளது என்பது திட்டவட்டமாக தெரிகிறது. ஆகவே 2048 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கத்தை மேம்படுத்த அவதானம் செலுத்த வேண்டுமே தவிர டிஜிட்டல் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்க கூடாது.அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை போலவே நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுகாலம் நீடிக்காது.

Related posts