யாழ். – சென்னை 7 நாட்களும் விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை முன்னர் திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படாவிட்டாலும், அன்றைய தினம் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இந்தியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானசேவைகள் இடம்பெறும் என யாழ் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியா விடுத்துள்ள அறிவித்தல் காரணமாக இந்தியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் சேவையை ஆரம்பிப்பது, மேலும் குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரத்தில் ஏழு நாட்களும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 12 மணிக்கு சென்னைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts