ஜனாதிபதி புலம்பெயர் தமிழரிடம் மன்னிப்பு கோர வேண்டும்

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்றைய தினம் (01) கலந்துகொண்டு ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதனை தெரிவித்தார் – பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்த எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல் தனக்கு விளங்கவில்லை.

ஆங்கிலம் தெரியாவிடின் தமிழில் கதைக்கும் படியும் கூறி இருந்தார். ஆங்கிலம் தெரியாவிடின் அது ஓர் பாரிய குற்றம் போல் சாடியிருந்தார்.

அவ் புலம்பெயந்தவர் ஜனாதிபதி 80 களில் கபினட் அமைச்சராக இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இருக்கலாம்.

ஜனாதிபதியின் இவ் கருத்து தொடர்பில் புலம்பெயர் தேசத்தவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம். ஆங்கிலம் என்பது வெறும் மொழிஅறிவு அல்ல. என்று தெரிவித்தார்.

Related posts