சங்கிலிய மன்னன் நினைவேந்தல்

இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில் மறவன் புலவு சச்சிதானந்தம் நெறிப்படுத்தலில் கீழ் யாழ் கலாச்சாரத்தின் கடைசித் தமிழ் மன்னன் 2ஆம் சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிரார்த்த தின நினைவேந்தல் நேற்று (11) யாழ். நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள அமரரின் நினைவு தூவியடியில் சங்கிலிய மன்னன் நினைவுக்குழுவின் தலைவர் பா.பாலகணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் யாழ். மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன், மருதனார் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா இ.சுந்தரேஸ்வரக்குருக்கள், ஆகியோர்கள் கலந்துகொண்டு சங்கிலிய மன்னன் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தினர்.

இதில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வு நிலை விரிவுரையாளர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், மதத்தலைவர்கள், மாநகர ஊழியர்கள், கலைஞர்கள், நலன்விரும்பியினர், ஊடகவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts