வியட்நாமிலிருந்து மேலும் 23 பேர் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோத குடியேற்றத்துக்காக கடல் வழியான பயணத்தின்போது, வியட்நாமிய கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர் அடங்கிய குழுவிலிருந்த மேலும் 23 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக, கடற்படையினர் நேற்று தெரிவித்தனர்.

2022 நவம்பர் 7ஆம் திகதியன்று வியட்நாமுக்கு அப்பால் கடலில் இந்தப் படகு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இலங்கையரில் 151 பேர் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்டு 2022 டிசம்பர் 28ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர் இந்த வாரம் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

ஏப்ரல் 19ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட இந்தக் குழுவில் 15 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts