பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள்

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலைய சேவைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேக்கர தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.

இவ்விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் சில வேலைத் திட்டங்களை இங்கே முன்னெடுக்க உள்ளோம். மிக விரைவில் இந்த காங்கேசன் துறை துறைமுகத்தை செயற்படுத்த நடவடிக் கை எடுக்கப்படும்.

அதேபோல் பலாலி சர்வதேச விமான நிலையமும் வருமானத்தை ஈட்டக்கூடியதே. இந் நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும்.

அவ்வாறு இவற்றை ஆரம்பித்தால், நாட்டிலுள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

Related posts