சினிமாவில் எதிரிகள் நித்யா மேனன் புகார்

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நித்யாமேனன் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரைக்கு வந்துள்ளது. நித்யாமேனன் குறித்து சமீப காலமாக அடிக்கடி வதந்திகள் வருகின்றன்.
ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று பேசினர்.
கேரளாவில் நடந்த ‘தட்சமயம் ஒரு பெண்குட்டி’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நித்யாமேனனை சந்திக்க சென்ற தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நித்யாமேனன் திமிர் பிடித்தவர் என்றும், அவர் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினர்.
இதுகுறித்து தற்போது நித்யாமேனனிடம் கேள்வி எழுப்பியபோது சினிமாவில் தனக்கு எதிரிகள் இருப்பதை உறுதி செய்தார். அவர் கூறும்போது, ”நாம் வளரும்போது நம் கால்களை பிடித்து கீழே இழுக்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள்.
அவர்கள் பேச்சை நாம் கேட்காதபோது இதுபோன்ற கிசுகிசுக்கள் வரும். நித்யா மேனனுடன் வேலை செய்வது ரொம்ப கஷ்டம் என்று வெளியே சொல்லுவார்கள்.
ஆனால் என்னோடு வேலை செய்தவர்கள் எப்போதும் அதுமாதிரி உணரவே இல்லை. ஏனென்றால், நான் எப்படிப்பட்டவள் என்பது அவர்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்” என்றார்.

இந்நிலையில், ’திருச்சிற்றம்பலம்’படத்தில் இடம்பெற்றுள்ள பாடலைப் பார்த்துவிட்டு, ’தாய்க்கிழவி’ என்று சமூக வலைதளங்களில் நித்யா மேனனை அழைத்து வருகின்றனர். இது தனக்குப் பிடிக்கவில்லை என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தின் நேரலையில் தோன்றிய அவர், ரசிகர்கள் யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்றும் அதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts