கப்பல் வரும் திகதியில் மாற்றமில்லை

ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் இன்னமும் எந்த தரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியன்று துறைமுகத்துக்கு வந்து 17ஆம் திகதியன்று திரும்பிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை இந்தியா, கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இன்று வரை இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சீன அரசாங்க தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. எனவே கப்பல் வரும் திகதியில் மாற்றம் இல்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts