தமிழ் குடிகாரி ஆடிய கூத்தால் வந்த வினை..

குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள். ஆண், பெண் பேதமே இல்லாமல் யாரைப் பார்த்தாலும் குடிகாரர்களாக மாறி நிற்கிறார்கள்.

தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக் கடைகளால் மக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர். ஆண்களும், பெண்களும் சரி சமமாக குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது.

இந்தநிலையில், திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு ஏராளமான வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் ஆண் ஒருவரை அடித்து வம்பிற்கு இழுத்ததோடு ஆபாசமாக பேசியது சுற்றித்திரிந்தது, பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தற்போது அந்தப் பெண் போதை ஆசாமி செய்த அட்டூழிய செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பஸ் நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

——-

அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி: பொதுமக்கள் பீதி

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததாக பொது மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால், பீதியடைந்த மக்கள், அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மறுத்துள்ளார். அந்த இடத்திற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். பயிற்சி விமானம் ஏதேனும் வனப்பகுதியில் விழுந்ததா? என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

Related posts