நம்பி நாராயணன் தமிழர் என்பது யாருக்கும் தெரியாது

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு மாதவன் இயக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

மேலும் நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் இதையடுத்து இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் மாதவன் கூறியதாவது, “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது.

அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

Related posts