தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்

தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தம்மிக்க பெரேராவினால் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

Related posts