21வது திருத்தம் இல்லை என்றால் விலகுவேன்

நாட்டின் எதிர்கால தலைமுறைக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான வேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்ற கருத்தும் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts