6 பேர் விடுதலை: முதல்- அமைச்சர்..

இந்த ஆலோசனையில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

உதகையில் காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஏனைய 6 பேரின் விடுதலைக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல் அமைச்சர் கூறியிருந்த நிலையில், இன்று 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Related posts