யாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா…?

கேஜிஎப்-1′ படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் யாஷ் முதன்முதலில் நட்சத்திர அந்தஸ்தை ருசித்தார்.

கே ஜி எஃப் படம் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், கேஜி எஃப் 2 படத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார்.

தங்கல் படத்தை பின்னுக்கு தள்ளி இந்தி மொழியில் அதிக வசூலை ஈட்டிய 2வது படம் என்ற சாதனையை கேஜிஎஃப் 2 திரைப்படம் படைத்துள்ளது.

அமீர் கானின் தங்கல் படம் இந்தியில் மட்டும் 387 கோடி ரூபாய் வசூலுடன் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த நிலையில், கேஜிஎஃப் 2 படம் 391 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகுபலி இரண்டாம் பாகம் 510 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தி மொழியில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் இரண்டு இடங்களில் தென்னிந்திய படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை வரும் என கணிக்கப்படட்டு உள்ளது.

இதில் இவர் வசிக்கும் வீடு மட்டும் – ரூ 6 கோடி என்று சொல்லப்படுகிறது.

மேலும், விளம்பர மாடலிங்களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும். கே ஜி எஃப் ரிலீசுக்கு முன்பு சம்பளம் ரூ 4 முதல் 5 கோடி பெற்று வந்த நிலையில் தற்போது, கே ஜி எஃப் 2 படத்திற்காக யாஷ் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்று தகவல் வெளிவந்துள்ளது.

மாதம் வருமானம் ரூ 55 முதல் ரூ 60 லட்சமாகும். அதுமட்டுமின்று, ஏழைகளுக்கு உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறாராம். கோடிக்கணக்கான தொகைக்கு வந்த புகையிலை விளம்பர ஒப்பந்தத்தை நடிகர் யாஷ் நிராகரித்துள்ளார்.

‘கேஜிஎப்-1’ படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் யாஷ் முதன்முதலில் நட்சத்திர அந்தஸ்தை ருசித்தார்.

அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும், சினிமா துறையில் எந்த தொடர்பும் இல்லை.அப்படியிருந்தும் தன்னுடைய விடாமுயற்சியால் சினிமாவில் முக்கிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார் யாஷ்.

‘யாஷ்’ என்ற மேடைப் பெயரால் அறியப்பட்டு வரும் அவருடைய நிஜப்பெயர், “நவீன் குமார் கவுடா” என்பதாகும்.

நவீன் குமார் கவுடா, எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு பேருந்து நடத்துனர். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. சிறுவயதில் இருந்தே யாஷ் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக வேண்டும் என்று கனவு கண்டார்.

எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடி, தனது கனவை எட்ட ஒரு வாய்ப்பைக் கொடுத்த யாஷ், தனது கனவை நிறைவேற்றுவதற்காக வெறும் 300 ரூபாயுடன் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் யாஷ் கூறும்போது, தன்னுடைய பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்வுகளை அவர் குறிப்பிடுகையில், “வகுப்பில், நீ வளர்ந்து பெரியவனான பின் யாராக மாற விரும்புகிறாய் என்று கேட்டதற்கு, நான் சூப்பர் ஸ்டாராக இருப்பேன் என்று சொல்வேன்.

அதனால், எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு நாள், நான் பட ஹீரோவாகி விடுவேன் என்று நம்பினேன்.

அது எவ்வளவு கடினம். அதற்கு எவ்வளவு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. எனக்கு எந்த துப்பும் இல்லை. ஆனால் நடிகனாக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது” என்றார்.

இருப்பினும் யாஷின் பெற்றோர்கள், தங்கள் மகனின் எட்டாத தூரத்தில் இருக்கும் கனவை நம்பவில்லை. யாஷ் கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பெனகா என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார்.

அவர் வெளியேறும் போது அவருடைய பெற்றோர், “சரி போ. ஆனால் நீங்கள் திரும்பி வந்தால், வேறு எதையும் நினைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

நான் அதற்கு சரி என்றேன். “ஏதாவது செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறி சென்றேன். நான் விரைவில் வீட்டிற்கு திரும்பி வருவேன் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை என்றார் யாஷ்.

அதன்பின், யாஷ் தனது சொந்த ஊரான மைசூரில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அவர் முதலில் நாடகங்களின் பின்னணியில் பணிபுரிந்தார். பின்னர் ‘துணை நடிகர்’ ஆனார்.

“நான் ஒரு துணை நடிகனானேன். சில நடிகர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது கிடைக்காவிட்டாலோ அவருடைய பங்கை நான் நடிப்பேன். அது அப்படித்தான் தொடங்கியது. பின்னர் எனக்கு பெரிய பாத்திரங்கள் கிடைக்க ஆரம்பித்தன” என்றார்.

மேலும், இந்தி சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தால், தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக அவர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

Related posts