சஜித் பிரேமதாசவுக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாது

அரசியமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம்கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எவ்வித அதிகரிப்பும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. எனினும் இது போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்காமல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எனத் தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (23) அதிகரிக்கப்பட்ட புகையிரத முன்பதிவு ஆசனக் கட்டணம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மலையகம் மற்றும் வடமாகாணத்திற்கான நகரங்களுக்கிடையிலான மற்றும் விசேட புகையிரத சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்த கட்டண அதிகரிப்பு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டிய புகையித நிலைய அதிபர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்தது, கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைடுத்து, குறித்த கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related posts