மலேசியா போய் மெருகேறி வந்த கதாநாயகி

‘பேராண்மை’ படத்தில் அறிமுகமான சாய் தன்சிகா, ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. பல புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் முதன்முதலாக ஒரு புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘மனோகரி.’ படத்துக்காக இவர் மலேசியா போய் தன்னை மெருகேற்றி வந்து இருக்கிறாராம்.

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன், இளவரசு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் வில்லனாக நடிக்கிறார். இவர் இப்போது பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நடிக்கும் முதல் படம், இது.

சினேகன் பாடல்களை எழுத, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். நவாஸ் அகமது கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். சூர்யா பிலிம் புரொடக்சன் தயாரிக்கிறது.

குடும்ப பாசம் கலந்த ‘சஸ்பென்ஸ்’ திகில் படம், இது. படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் 15 நாட் களாக நடைபெற்று வருகிறது.

Related posts