தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சிக்கவும்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடரும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கைதான மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts