யாழ் மாவட்ட மதத் தலைவர்கள் கைச்சாத்து

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ் மாவட்ட மதத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

குறித்த கைச்சாத்து மாவட்ட மதத்தலைவர்களின் வாசஸ்த்தலத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆகிய எ​ம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நல்லை திருஞான சம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள்,

கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும்

தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்தி்ற்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர்கள் கையொப்பம் ஈட்டனர்

Related posts