இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்படுகிறது.

மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த வருடம், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts