ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

நடுக்கடலில் மீன் பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடிப்பது தொடர்கதையாக உள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற இந்தப் படகுகள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஆறுக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் சுமார் 40 கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீன்பிடி படகுகளை கண்டதும் உடனடியாக அங்கிருந்து படகுகளை எடுத்துச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர்.மேலும் படகுகளை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இலங்கை கடற்படையினர் எச்சரித்ததும் கடலில் வீசி இருந்த வலைகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு மீன் பிடிக்காமலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பியது.

நடுக்கடலில் மீன் பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடிப்பது தொடர்கதையாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மீனவர்கள் மத்தியில் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே பிடித்துச் சென்று இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை இதுவரை விடுவிக்க நிலையில் இந்த நிகழ்ச்சி மீனவர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Related posts