ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இலங்கையர் பலி

தென்கிழக்கு இலண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் (Bexleyheath) உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்திலுள்ள 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தாய், அவரது 2 பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.

அவ்வீட்லிருந்த, மைத்துனர் வீட்டின் மேல் மாடியலிருந்து ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரணமடைந்த இரு பிள்ளைகளின் தாயான நிருபா, தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ‘தீ, தீ’ என கூச்சலிட்டதாக, அவரது கணவரான யோகன் தங்கவடிவேல் தெரிவிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அலுவலகத்திலிருந்து வந்த கணவர் அவர்களது உயிரற்ற உடலையே மீட்டுள்ளார்.

இறுதியில் நிருபா அவரது ஒரு வயது மகள் ஷஸ்னா, 4 வயது மகன் தாபிஷ், நிருபமாவின் தாய் ஆகியோர் தீப்பிடித்து இறந்த ஒரு சோகமான சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தீ அலாரம், உரிய வகையில் ஒலிக்காமை தொடர்பில், பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts